தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன என்றுமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியம்
தமிழகம் முழுவதுமுள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன.
2000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது .
அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன.
ஒரு ஆண்டு அடிப்படையில் தற்காலிகமாக அமைப்பாகத்தான் மினி கணக்குகள் தொடங்கப்பட்டன. செவிலியர்கள் இல்லாமல் கிளினிக்குகள் செயல்படாமல் இருந்தன.
மினி கிளினிக்குகளுக்காக பணியமர்த்தப்பட்ட 1800 மருத்துவர்களை வேறு திட்டத்திற்கு பணி மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது ” என்றார்.