பல ஆண்டுகளாக, ரூ.210 கோடி மதிப்பில், கட்டப்பட்டு வந்த கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இன்று காலை, முதல்வர், வேளச்சேரியில் தரமணி-வேளச்சேரி இணைப்புச் சாலை திறந்து வைத்தார்.
தரமணி முதல் 100 அடி சாலை வரை, 1,028 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜவாஹா்லால் நேரு 100 அடி சாலை மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
1 கிலோமீட்டர் தூரத்துக்கு, ரூ.93 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.