தீபாவளியை திருநாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்றும் (02.11.2021), நாளையும் (03.11.2021) இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிவாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
நெரிசல் மிகுந்த சென்னையில் தீபாவளி ஷாப்பிங் மற்றும் சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தற்போது மெட்ரோ ரயிலின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும்.
மேற்கண்ட மெட்ரோ இரயில் நேர நீட்டிப்பு சேவைகள் இந்த இரண்டு தினங்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.