Penbugs
Editorial News

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் – பிரதமர் மோடி

Nobody has breached our border: PM Modi

டெல்லியில் விவசாயிகள் ஓர் ஆண்டாக போராடி வரும் நிலையில் மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார் பிரதமர் மோடி.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது இந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று உறுதி அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

விவசாயிகளின் நலனை காக்கதான் மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்தோம். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். விவசாயிகள் நலன் சார்ந்த நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது .

ஆனால் ஒரு தரப்பு விவசாயிகளுக்கு புரிய வைப்பதில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று நான் அறிவிக்கிறேன் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment