இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட நபர்களில் 13 லட்சத்து 32 ஆயிரத்து 471 பேருக்கு முதல் டோசும், அதே வயதுடைய நபர்களில் 76,723 பேருக்கு 2வது டோசும் நேற்று செலுத்தப்பட்டு உள்ளது.
37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 37 ஆயிரத்து 869 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 3 லட்சத்து 16 ஆயிரத்து 134 பேருக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த வயதுடைய நபர்களில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெற்று பயனடைந்து உள்ளனர் என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது