தமிழகத்தில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் பற்றிய சுகாதாரத் துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இன்று புதிதாக 1,702 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,95,935 ஆக உயர்ந்துள்ளன.
இன்று ஒரே நாளில் 1,892 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,41,432 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று ஒரு நாளில் 29 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 34,639 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள் :
கோவை – 198
சென்னை – 193
ஈரோடு – 147
தஞ்சாவூர் – 112
செங்கல்பட்டு – 98