தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது.
ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட மதுபானங்களை டாஸ்மாக் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.
வெளிநாட்டு மது பானங்களுக்கான வரியை உயர்த்தும் முடிவு சென்னையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
அதன்படி தற்போது வெளிநாட்டு மதுபானங்களுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது.

