தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.
பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி
உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
தியேட்டரில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி
அனைத்துப் பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை
பெட்ரோல் பங்குகள் செயல்பட அனுமதி