தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தகவல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி,சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
இன்று தமிழகத்தில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதன் மூலம் மொத்த பாதிப்பு 23,39,705 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று மேலும் 27,463 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 21,48,352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 374 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 29,280 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 524085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,97,90,743 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,82,878 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,62,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.