தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் தமிழகத்தில் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி.
மீன்சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதி.
அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்
பதிவுகள் மேற்கொள்ள அனுமதி.
மின் பணியாளர் (Electricians)
பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians), தச்சர் போன்ற
சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதி. – தமிழக அரசு
மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி – தமிழக அரசு
மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும்
கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி.
தொற்று குறைவான பகுதிகளில் மளிகை, காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இ-பதிவு பெற்று வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் ஜூன் 14ம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்