தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று தமிழகத்தில் மேலும் 990- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 03 ஆயிரத்து 613- ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து மேலும் 1,153- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 20 ஆயிரத்து 153- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் நேற்று 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11,309- ஆக உள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.