சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், படுக்கைகளுக்கான தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதற்காக ஏற்கனவே சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள பள்ளிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக கையகப்படுத்த ஒப்படைக்குமாறு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்கும்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையையும் சென்னை மாநகராட்சி கேட்டுள்ளது.
கொரோனா தீவிரத்தை கட்டுபடுத்த இன்றுமுதல் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
US: JK Rowling’s book sales sees low after “transphobic” comments