Cinema Coronavirus Inspiring

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

கொரோனா பரவலை தடுக்க நடிகர் அஜித் கொடுத்த யோசனையின் பேரில்
கொரோனா அதிகம் பாதிகப்பட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக அந்த பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன‌.

அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமிநாசினி தெளிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களை அஜித்தின் அறிவுரையின் பேரில் உருவாக்கியுள்ளனர். இதனைக் கொண்டு அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அளவு பரப்பளவில் கிருமி நாசினிகளை தெளித்து விடலாம்.

இந்நிலையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா ட்ரோன்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு – களப்பணியில் நடிகர் அஜித்தின் ‘தக்‌ஷா’ குழு சிறப்பாக செயல்படுவதாக கர்நாடகாவின் துணை முதல்வர் பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ‘தக்‌ஷா’ என்னும் மாணவர்களின் ஆராய்ச்சி குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகாராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்தக் குழு பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து, சாதனைகளைப் படைத்தது. பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகள் வென்றது குறிப்பிடதக்கது.

Related posts

ஊஹானில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததாக அதிகாரிகள் தகவல்

Penbugs

Kadaisi Vivasayi trailer: Authentic, hard-hitting and witty!

Penbugs

In pics: Mahat-Prachi wedding

Penbugs

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

COVID19 in TN: 447 new cases

Penbugs

Kajal Aggarwal-Gautam Kitchlu launches “Kitched”

Penbugs

Kadholu – Tamil Comedy Short[2020]: A love story in a faultily perfect universe

Lakshmi Muthiah

Karnan Review- A Must Watch

Penbugs

ஐந்து மொழிகளில் வெளியான சிம்புவின் மாநாடு டீசர்..!

Kesavan Madumathy

Nerkonda Parvai Trailer: Ajith does justice to his role!

Penbugs

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs