Coronavirus

ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை!

TN government announce relaxation measures for industries in non-containment zones

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என கருதுவதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக 136 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, தமிழக அரசால் இரண்டே வாரத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர்,

மிக சிறப்பான, அனைத்து வசதிகளுடன் எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக, இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்றார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளதாகவும், 57.89 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொற்று பரவல் குறைந்துள்ளது என்று கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். ஊரடங்கு காலத்தில் முழு ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் இனி ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருக்காது என்றும் பழனிசாமி கூறினார்.

Related posts

Have political differences but want him to recover soon: Gambhir on Afridi

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் மோடி

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

கொரோனா பாதிக்கப்பட்ட 70 – 75% பேருக்கு அறிகுறிகள் இல்லை: உத்தவ் தாக்கரே

Penbugs

Amid lockdown extension, Migrant workers protest at Mumbai Bus stand

Penbugs

கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலம் ஆனது கோவா..!

Penbugs

தமிழகத்தில் 160 நாட்களுக்குப் பிறகு தொடங்கியது பேருந்து சேவை

Penbugs

இன்று தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Kesavan Madumathy

Two weeks after losing her mother, Veda Krishnamurthy loses her sister to COVID-19

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Kesavan Madumathy

Leave a Comment