Coronavirus

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 33 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக இருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதை நிவர்த்தி செய்ய அரசு சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இருக்கும் அம்மா உணவகங்கள் அனைத்தும் முழுநேரமும் செயல்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கப்பட்டு பார்சல் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆளும் அதிமுக தனது கட்சி நிதியில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் ஏற்பாட்டைச் செய்துள்ளது. அரசுக்கு சொந்தமான அம்மா உணவகத்தை அதிமுக நிதியில் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் இருக்கும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருக்கும் அம்மா உணவகங்களில் மாநகராட்சி சார்பாக இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5850 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Tamil Nadu: 6516 discharge cases today

Penbugs

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

Penbugs

Sonu Sood promises knee surgery to injured javelin thrower Sudama Yadav

Penbugs

Tamannaah Bhatia’s parents test positive for COVID19

Penbugs

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

Kesavan Madumathy

கோவிஷீல்டு தடுப்பூசி விலை ஏற்றம்

Kesavan Madumathy

COVID19: Sonu Sood launches toll free number to help migrant workers reach home

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்; ஏர் இந்தியா..!

Penbugs

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs