Editorial News

1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ஓலா நிறுவனம் அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக வருவாய் குறைந்ததால், 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக வாடகை கார் சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்துள்ளார். அதில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த 2 மாதங்களாக நிறுவனத்தின் வருவாய் 95 சதவீதம் குறைந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தப் பிரச்சனையின் தாக்கம் நீண்ட காலம் இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். பணி நீக்கப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாத அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் புதிய வேலை கிடைக்கும் வரை அல்லது நடப்பு ஆண்டு இறுதி வரை மருத்துவம், ஆயுள், விபத்து காப்பீடுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Related posts

Name change of places in TN: Tuticorin all set to be called Thoothukudi from now

Penbugs

Indian Intelligence agencies asks Govt to block 52 mobile apps with links to China

Penbugs

Power couple Sue Bird and Megan Rapinoe are engaged

Penbugs

Switzerland’s Matterhorn peak lights up with Indian flag in show of solidarity

Penbugs

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

Penbugs

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா …!

Penbugs

Pakistan Police blames woman for gang rape, faces backlash

Penbugs

NBA to Suspend Season following Tonight’s Games

Lakshmi Muthiah

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

Accused Cop Has Been Arrested in Twin Murder Case

Lakshmi Muthiah

JK Rowling once again in news for anti trans tweets

Penbugs