பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிலடி தந்துள்ளார்கள்.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, உலகமே கொரோனா வைரஸ் என்கிற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைவிட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை மோடி பணியில் அமர்த்தியுள்ளார் என்று பேசினார்.
அப்ரிடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள்.
முன்னாள் வீரர் கம்பீர் கூறியதாவது:
சிலருக்கு வயது ஆகிறதே தவிர மனத்தளவில் வளர்ச்சி அடைவதில்லை. 16 வயது நபர் போல அப்ரிடி பேசுகிறார். ஏழைகளுக்கு உணவு கொடுக்கச் சென்றுவிட்டு இப்படிப் பேசலாமா? உங்கள் நாட்டின் நிலைமை என்ன? உங்களிடம் பணம் இல்லை, மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் பேசினால் அப்ரிடியை யாரும் மதிக்க மாட்டார்கள் என்றார்.
இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கூறியதாவது:
மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதநேய அடிப்படையில் அவருடைய முயற்சிக்கு உதவச் சொன்னேன். இனி ஒருபோதும் அவருக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றார்.
இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் யுவ்ராஜ் சிங்கின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். நம் நாட்டைப் பற்றியும் பிரதமர் பற்றியும் அப்ரிடி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதநேய அடிப்படையில் தான் அப்ரிடிக்கு உதவினேன். இனி ஒருபோதும் அப்ரிடிக்கு ஆதரவு கிடையாது என்று கூறியுள்ளார்.
முன்னணி வீரர் ஷிகர் தவன் கூறியதாவது: உலகமே கரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும்போது காஷ்மீர் பற்றி பேசுகிறீர்கள். காஷ்மீர் எப்போதும் எங்களுடையதுதான் என்று பதிலடி தந்துள்ளார்.

CSA Women’s Super League, match 2, Duchesses vs Coronations – Coronations win by 6 runs