Coronavirus Editorial News

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை இன்று தொடங்கியது .

கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என ஒடிசா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நிபந்தனைகளுடன் கூடிய‌ அனுமதியை உச்ச நீதிமன்றம் வழங்கியது .

பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் சங்கராச்சாரியர் சுவாமி நிஸ்சாலந்த சரஸ்வதி, ஆலயத்தின் ரத யாத்திரையை நடத்துவதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிபதி யாத்திரைக்கு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் அனுமதி அளித்தார்.

அதன்படி உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளால், இந்த ஆண்டு பொதுமக்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.பூசாரிகள், அதிகாரிகள், போலீசார் என 500 பேர் அளவிலேயே இழுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நிபந்தனை விதித்துள்ளது. மேலும் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 தேர்களையும் இழுக்கும் 700 பூசாரிகளுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது .

12 நாட்கள் நடைபெறும் ஆலய தேரோட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் உத்திரவாதம் அளித்துள்ளது.

Related posts

Lockdown to be extended for 2 weeks, relaxed guidelines soon

Penbugs

Recent: Chief Minister welcomes the first transgender nurse

Penbugs

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

Real Madrid lifts La Liga title

Penbugs

Actress Namitha takes care of stray dogs during Coronavirus pandemic

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

ENG v IRE, 3rd ODI: Tons from Stirling, Balbirnie leads Ireland in highest run chase

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID 19 help: Jaydev Unadkat to contribute 10% of his IPL salary

Penbugs

Earthquake tremors felt in Delhi-NCR region

Penbugs

Nobody has breached our border: PM Modi

Penbugs

பூமி ஒன்று தான்…!

Dhinesh Kumar