Coronavirus Editorial News Editorial News

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

108 சேவைக்கு புதிய வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைத்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதன்படி தமிழகம் முழுவதும் தற்போது 1,005 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த சேவையை விரிவுபடுத்த 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை கூடுதலாக கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்பாட்டிற்கு வழங்குவதாக முதல்வர் அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, முதற்கட்டமாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இதில் அரசு சார்பில் 90 வாகனங்களும், தனியார் நிறுவனம் சார்பில் 18 வாகனங்களும் செயல்பட உள்ளன.

90 அவசர ஊர்திகளில் 10 வாகனங்கள் ரத்த சேவை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த அவசர வாகனங்கள் தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்படும். தொடர்ந்து, சில தினங்களில் மீதமுள்ள அவசர வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

தாதாசாகேப் தென்னிந்திய சினிமாவிருதுகள் அறிவிப்பு 2020: அஜித், ஜோதிகாவுக்கு விருது

Penbugs

ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கலாம்

Kesavan Madumathy

Nigeria new law: Surgical castration, death penalty for rapists

Penbugs

இனி ஆன்லைனில் மீன் வாங்கலாம் – இணையதள செயலியை அறிமுகப்படுத்திய மீன்வளத்துறை

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை!

Kesavan Madumathy

மெட்ரோ ரயில் சேவை – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Penbugs

Mashrafe Mortaza recovers from COVID19

Penbugs

Pallavaram: Migrant workers protest demanding to send back home

Penbugs

He was practising hard, you’ll see his helicopter shot soon: Raina on Dhoni

Penbugs

Rare: Yellow turtle rescued in Odisha’s Balasore District

Penbugs

Trump nominates Indian-American Attorney Saritha Komatireddy as US Federal Court judge

Penbugs

Leave a Comment