கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த 2ஆம் தேதி ட்விட்டர் பதிவில் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா தொற்று நீங்கிய பிறகு அவர் வீடு திரும்பினார்.
இருப்பினும், உடல்வலி, தலைசுற்றல் காரணமாக, கடந்த 18ஆம் தேதி அவர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் அமித்ஷா உடல்நலம் தேறி விட்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமித்ஷா இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.