இந்திய சினிமாவில் தனது தீவிர பங்கையும் அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களையும் வருடா வருடம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்படும் விதமாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும்.
அந்த வகையில் 50 வது வருடத்திற்கானத் தாதா சாகேப் பால்கே விருது இந்தி சினிமாவின் பிதாமகர் என அழைக்கப்படும் அமிதாப் பச்சன் அவர்களுக்கு மேதகு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் இன்று வழங்கப்பட்டது.
இதற்கு முன் தமிழ் சினிமாவின் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், L.N. பிரசாத் அவர்கள் மற்றும் இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர் அவர்களும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!
வாழ்த்துக்கள் அமிதாப் பச்சன் அவர்களே..!