Editorial News

ஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மகால் மீண்டும் திறப்பு

ஆறு மாதங்களுக்குப் பிறகு தாஜ்மகால் சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்காக மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 17- ஆம் தேதி தாஜ்மகால் மூடப்பட்டது.

தற்போது ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து அன்லாக்-4 என்ற அடிப்படையில் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது .

இந்நிலையில் செப்டம்பர் 21-ந்தேதியில் இருந்து சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால் திறக்கப்படுகிறது.

தாஜ்மகால் வருபவர்கள் சமூக இடைவெளி, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலை காண வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், ஆன்-லைன் மூலம் டிக்கெட் வாங்க வேண்டும், டிக்கெட் கவுண்டர் திறந்திருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலை பார்வையிட ஒரு நாளைக்கு 5000 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

மதியம் 2 மணிக்கு முன்பு 2500 பேரும், அதற்குப்பின் 2500 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டபேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Kesavan Madumathy

Cologne Boxing World Cup: India end with 9 medals, including 3 Gold medals

Penbugs

PUBG Corporation responds to PUBG MOBILE ban in India

Penbugs

Football legend Diego Maradona passes away

Penbugs

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

மதுரையில் தன் மகனுக்கு மெழுகுச்சிலை ; தந்தை உருக்கம்

Penbugs

பிரபல நடிகை விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைந்தார்

Kesavan Madumathy

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

Penbugs

Rhea Chakraborty arrested by NCB

Penbugs

Vi unveils a collaborative program to offer a range of customer benefits for Learning & Upskilling, Health & amp; Wellness, and Business Help

Penbugs

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கேப்டன் விஜயகாந்த் போட்டியிடவில்லை

Kesavan Madumathy

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

Leave a Comment