அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இணைந்து அறிவிக்க உள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல் , சசிகலா விடுதலை நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் , அமைச்சர்களில் சிலர் வலியுறுத்தி வந்தனர்.
அதனை தொடர்ந்து சுமார் ஐந்து மணி நேரமாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வரும் 7ந் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து அறிவிப்பார்கள் என்று அறிவித்தார் .