Editorial News Inspiring

இந்தியாவின் கடைசி முடிசூடிய மன்னர் ஓர் தமிழன்!

சிவ சுப்பிரமணிய கோமதி சங்கர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா.. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்கா சிங்கம்பட்டி ஜமீனின் முடி சூடிய மன்னர் இவர்.

இந்தியாவில் முடிசூடிய கடைசி மன்னர் இவர். 1931ல் பிறந்த முருகதாஸ் தீர்த்தபதி மஹாராஜா, தனது 3 வயதில் தன் தந்தை இறந்துபோகவே, சிங்கம்பட்டி ஜமீனுக்கு மன்னராக முடிசூடிக்கொண்டார். இந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு இருக்கிறது. தற்போது இருந்த முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா 33வது மன்னராவார்.

நாயக்கர் ஆட்சிகாலத்தில் பாளையமாக மாறிய சிங்கம்பட்டி சமஸ்சாதனம் 76 பாளைங்களில் 24 பாளைங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. பிறகு பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் ஜமீனாக மாறியது.

1952 ஜமீன் ஒழிப்புச்சட்டம் வரவே சிங்கம்பட்டி ஜமீனும் அதிகாரம் இழந்தது. அதன்பின் முறையாக முடிசூடிய கடைசி மன்னர் இவர் மட்டுமே.

சிங்கம்பட்டி ஜமீனுக்கு மேற்குதொடர்ச்சி மலையில் 8400 ஏக்கர் நிலமும், சிங்கம்பட்டி ஜமீனில் 7000 ஏக்கர் நிலமும் கட்டுபாட்டில் இருந்திருக்கிறது. 1952 க்கு பிறகு அனைத்தும் அரசாங்கம் எடுத்துகொண்டது.

தனது 89 வயதில் சிவசுப்பிரமணிய கோமதிசங்கர முருகதாஸ் தீர்த்தபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். சுதந்திர இந்தியாவில் வாழ்ந்த முடிசூடிய கடைசி மன்னர் ஒருவரும் இயற்கை எய்தினார்.

Credits: Mohan Kumar G

Related posts

ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு!

Kesavan Madumathy

இனி ஆன்லைனில் மீன் வாங்கலாம் – இணையதள செயலியை அறிமுகப்படுத்திய மீன்வளத்துறை

Penbugs

Fadnavis quits as CM, says we don’t have numbers after Ajit Pawar’s resignation

Penbugs

அரசு பள்ளிகளை தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு!

Penbugs

அன்பான சூர்யாவுக்கு !!

Shiva Chelliah

Making of Smriti Mandhana

Penbugs

Caribbean Kings In IPL 2020

Penbugs

SRK to provide aid to kid who tried to wake up his dead mom at station

Penbugs

TN reports 1st case of Corona Virus, patient admitted in Chennai

Penbugs

Elon Musk’s tweet results in $14 billion loss in value for Tesla

Penbugs

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs