Editorial News Inspiring

இந்தியாவின் கடைசி முடிசூடிய மன்னர் ஓர் தமிழன்!

சிவ சுப்பிரமணிய கோமதி சங்கர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா.. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்கா சிங்கம்பட்டி ஜமீனின் முடி சூடிய மன்னர் இவர்.

இந்தியாவில் முடிசூடிய கடைசி மன்னர் இவர். 1931ல் பிறந்த முருகதாஸ் தீர்த்தபதி மஹாராஜா, தனது 3 வயதில் தன் தந்தை இறந்துபோகவே, சிங்கம்பட்டி ஜமீனுக்கு மன்னராக முடிசூடிக்கொண்டார். இந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு இருக்கிறது. தற்போது இருந்த முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா 33வது மன்னராவார்.

நாயக்கர் ஆட்சிகாலத்தில் பாளையமாக மாறிய சிங்கம்பட்டி சமஸ்சாதனம் 76 பாளைங்களில் 24 பாளைங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. பிறகு பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் ஜமீனாக மாறியது.

1952 ஜமீன் ஒழிப்புச்சட்டம் வரவே சிங்கம்பட்டி ஜமீனும் அதிகாரம் இழந்தது. அதன்பின் முறையாக முடிசூடிய கடைசி மன்னர் இவர் மட்டுமே.

சிங்கம்பட்டி ஜமீனுக்கு மேற்குதொடர்ச்சி மலையில் 8400 ஏக்கர் நிலமும், சிங்கம்பட்டி ஜமீனில் 7000 ஏக்கர் நிலமும் கட்டுபாட்டில் இருந்திருக்கிறது. 1952 க்கு பிறகு அனைத்தும் அரசாங்கம் எடுத்துகொண்டது.

தனது 89 வயதில் சிவசுப்பிரமணிய கோமதிசங்கர முருகதாஸ் தீர்த்தபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். சுதந்திர இந்தியாவில் வாழ்ந்த முடிசூடிய கடைசி மன்னர் ஒருவரும் இயற்கை எய்தினார்.

Credits: Mohan Kumar G

Related posts

UP: 60YO gangraped, found unconscious in outskirts

Penbugs

Tamil Nadu stops issuing EWS certificates

Penbugs

103-year-old woman celebrates with beer after beating COVID-19

Penbugs

India’s first corona linked death is a 76 year old man

Penbugs

Pride month: 90YO comes out as gay

Penbugs

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

கர்நாடகாவில் இன்று திறக்கப்படும் மதுக்கடைகள்!

Penbugs

Don’t want to be judged by my religion: Irrfan Khan’s son Babil

Penbugs

ஏப்ரல் 29ல் வெளியாகும் ஓப்போ ‘ஏ92’ – 6 கேமராக்கள்.. 5ஜி நெட்வொர்க்

Penbugs

TN Govt school students to be taught via TV

Penbugs

Born on this day- August 3, Sunil Chhetri

Penbugs

Tokyo 2021: Bhavani Devi becomes first Indian fencer to qualify for Olympics

Penbugs