Coronavirus Editorial News

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு, ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை முதல் பேருந்து சேவையை ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் இன்று காலை முதல் பேருந்துசேவைகள் தொடங்கின. சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலத்துக்குள் 436 வழித்தடங்களில் 1683 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று காலை 7 மணி முதல் ஆந்திரத்தில் பேருந்து சேவைகள் தொடங்கின. இதற்காக நேற்று மாலை 4 மணி முதல் ஆன்லைன் மூலம் பயணிகள் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்துக் கழக துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரதாப் கூறுகையில், பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம். பேருந்துக்குள் ஏறும்போது பயணிகள் தங்கள் கையை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் தங்களது செல்லிடப்பேசியில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வதும் கட்டாயமாக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

Related posts

Covid19: Lions take a nap on empty road amid lockdown

Penbugs

Jacinda Ardern wins second term in landslide victory; set to return as NZ PM

Penbugs

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்.!

Penbugs

ஊரடங்கு உத்தரவு சமயத்தில் யோகி ஆதித்யநாத்தின் மிக முக்கிய அறிவிப்பு…!

Penbugs

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ..!

Penbugs

Battle for Biscuits: Heartbreaking video of workers fight for biscuits in hunger

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

Penbugs

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Gracias, Ferru!

Penbugs

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

NBA to Suspend Season following Tonight’s Games

Lakshmi Muthiah