Coronavirus

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து, அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரபல தெலுங்கு பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சல் தானாகவே குணமடைந்தாலும், நாங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அந்த சோதனை முடிவில் எங்களுக்கு லேசான அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின்படி, நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர், ‘எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நலமாக உள்ளோம். ஆனால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம். அப்போதுதான் ப்ளாஸ்மா செல்களை தானம் செய்ய முடியும்’என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி: ராகுல் கண்டனம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5525 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

TN: 2 districts color-code vehicle to limit traffic

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID-19: Lockdown extended till June 30 in containment zones

Penbugs

Leave a Comment