Editorial News

கலைஞரின் நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்த இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திலும் கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தியதுடன், சிஐடி காலனியில் உள்ள இல்லத்திலும் கருணாநிதி படத்திற்கு ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சிஐடி காலனியில் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் கட்சியின் மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர் பாலு, உள்ளிட்டோருடன் மு.க ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு அவருடைய சாதனைகளை நினைவுகூறும் விதமாக டிவிட்டரில் எங்கெங்கும் கலைஞர் என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் மற்றும் கலைஞரின் ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

Recent: Revised data plans of Airtel, Jio, Vodafone, Idea

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

Protected: Happy Birthday, Thambi

Penbugs

The Best FIFA Awards: Messi, Klopp, Rapinoe bag top honours

Penbugs

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Penbugs

Chennai woman beats up man who sent her obscene videos by inviting him home

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

Tokyo Olympics: New dates announced

Penbugs

சென்னையில் இன்று மின்தடை

Penbugs

ஓப்போ தொழிற்சாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

Kesavan Madumathy

Deepika Padukone visits JNU, interacts with students attacked on Sunday

Penbugs

Leave a Comment