Coronavirus

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு இதுவரை கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 5 போலீசார் மரணமடைந்து விட்டதாகவும் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 714 போலீசாரில் 81 பேர் அதிகாரிகள் எனவும், 633 பேர் காவலர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 714 போலீசாரில் 5 பேர் மரணமடைந்து விட்ட நிலையில், 648 பேர் சிகிச்சை பெறுவதாகவும், மேலும் 61 பேர் குணமடைந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் மீது 194 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதில் 73 போலீசார் உள்பட 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ள மகாராஷ்டிர காவல்துறை, இச்சம்பவங்கள் தொடர்பாக 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளிடம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு

Penbugs

COVID19: Kerala CM Pinarayi Vijayan confirms community spread

Penbugs

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: பிரகாஷ் ஜவடேகர்

Penbugs

Domestic violence: Man hits wife with pin roller for ‘tasteless’ food!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6129 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5718 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

“India’s attack on China”: PM Modi quits China’s Social Media App Weibo

Penbugs

PVR to explore social distancing amid coronavirus lockdown

Penbugs

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Penbugs

Akshay Kumar donates Rs 25 Crore to PM relief fund

Penbugs