Editorial News

மாரியப்பன் ,ரோகித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார்.

அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ர, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா, தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மானு பாகேர் ஆகியோர் உள்பட 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

Related posts

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

Penbugs

REPORTS: Ishant Sharma suffers back injury, likely to miss a few matches

Penbugs

Mumbai on hold due to major power failure

Penbugs

Gmail, Google Drive, Google Docs, Other Google Services Down Globally

Penbugs

Chinese Billionaire Jack Ma suspected missing

Penbugs

Bengal: Manoj Tiwary joins TMC ahead of elections

Penbugs

Donald Trump calls India’s air quality as filthy

Penbugs

மூத்த நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார்

Kesavan Madumathy

போர்க் கப்பல் குழுக்களில் முதன்முறையாக இணைந்த பெண்கள்

Penbugs

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது

Penbugs

21YO Arya Rajendran set to become youngest Mayor in India

Penbugs

Power shutdown in part of Chennai on October 8

Penbugs

Leave a Comment