Editorial News

மாரியப்பன் ,ரோகித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார்.

அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ர, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா, தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மானு பாகேர் ஆகியோர் உள்பட 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

Related posts

Hyderabad: Women complains of sexual exploitation by 139 people

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் ; இன்று இலவச பயணம்

Penbugs

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Penbugs

உறுதியானது திமுக – விசிக கூட்டணி ; 6 தொகுதிகள் ஒதுக்கீடு..!

Penbugs

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு

Kesavan Madumathy

I may be the 1st woman in this office, I will not be the last: Kamala Harris

Penbugs

நாளை முதல் சென்னை புறநகர் ரயிலில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Kesavan Madumathy

Breaking- PSL 2021 Postponed

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்

Penbugs

Groping is not sexual assault if there is no ‘skin to skin’ contact: Bombay HC

Penbugs

Leave a Comment