Coronavirus Editorial News

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என்பது குறித்து பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 10 -ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. `பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை 2-வது வாரத்தில் நடத்துவது குறித்து மதியம் 2.30 மணிக்குள் முடிவெடுத்து அரசு தரப்பில் பதில் தெரிவிக்க வேண்டும். ஜூன் 15-ல் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மதியம் மீண்டும் தொடங்கிய வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான நேரம் என வாதாடியது.

மேலும் தமிழகத்தில் 2 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் தேர்வை நடத்தத இதுவே சரியான நேரம் என வாதாடினர். தொடர்ந்து 10 -ம் வகுப்பு தேர்வு என்பது முக்கியமான தேர்வு என்றும், 11 மாநிலங்கள் ஏற்கெனவே இந்தத் தேர்வை நடத்தி முடித்துவிட்டன எனவும் தேர்வு மையங்களில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு வாதாடியது

Related posts

David Willey, 3 others to miss Vitality Blast after 1 player tested COVID19 positive

Penbugs

PVR to explore social distancing amid coronavirus lockdown

Penbugs

Corona in US: Amazon to hire 1 lakh workers as online orders surge

Lakshmi Muthiah

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Penbugs

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

ஒரே நாளில் 1,600-ஐ தாண்டிய கொரோனா நோய் தொற்று

Penbugs

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு …!

Penbugs

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா

Penbugs

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

Kesavan Madumathy

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

Four men die while cleaning the sewage tank

Penbugs