தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதற்கு முன்பாக மார்ச் 31, மே 4, ஜூன் 2 ஆகிய நாட்களில் தமிழக ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் 4வது முறையாக இன்றும் ஆளுநரை சந்தித்த முதலமைச்சர், கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் எடுத்துள்ள கூடுதல் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.