Editorial News

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, ஒரு முழு கரும்பு, அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதையொட்டி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:

தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 2 கோடியே 10 லட்சத்து ஆயிரத்து 963 பேருக்கு தலா ரூ.2,500 நிதி உதவி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு துணிப்பை கொடுக்கப்பட உள்ளது. மேற்கொண்ட பொருட்களை கொள்முதல் செய்யவும், தலா ரூ.2,500 ரொக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.5604.84 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்க உணவு பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் ஆணையர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அகதிகளுக்கு ரொக்கமாக ரூ.2,500 நிதியுதவி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5604.84 கோடி (ஐந்து ஆயிரத்து அறுநூற்று நான்கு கோடியே எண்பத்து நான்கு லட்சம் ரூபாய்) உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துணை ஆணையாளருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஒன்பது குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2500 வழங்கினார்.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Related posts

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

Orissa High Court orders state to give protection to a woman who wants to live with her same-sex partner

Penbugs

புதிய மாவட்டங்களின் சட்டபேரவை தொகுதிகள் அறிவிப்பு

Penbugs

Scotland becomes 1st country to make sanitary pad, tampons free

Penbugs

Football: Brazil to pay equal salary for both men and women national players

Penbugs

Chennai’s Nethra becomes 1st Indian woman sailor to qualify for Olympics

Penbugs

நாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை – முதலமைச்சர்

Penbugs

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

BAA vs VID, Match 3, ECS Austria-Vienna-2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

மாரியப்பன் ,ரோகித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

Penbugs

Dentist who performed tooth extraction while riding hoverboard arrested

Penbugs

Leave a Comment