தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,290 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் இன்று 1188 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,92,780 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 12 பேர் உள்பட இதுவரை 12,700 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,715 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 8,61,424 பேர் குணமடைந்துள்ளனர்.
