Coronavirus Editorial News

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

அனைத்து ரயில்களையும் சரியான நேரத்தில் இயக்கி, ரயில்வே நேற்று, 100 சதவீத சாதனை படைத்தது. கொரோனா பரவலைத் தடுக்க, மார்ச், 25ல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், மெயில், எக்ஸ்பிரஸ், மெட்ரோ, புறககர், பயணியர் என, அனைத்து விதமான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. சிறப்பு ரயில்இதன்பின், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புவதற்காக, மே, 1ம் தேதி முதல், தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களை, ரயில்வே இயக்கி வருகிறது. இதன்பின், மே, 12ம் தேதி முதல், டில்லியிலிருந்து, 15 முக்கிய நகரங்களுக்கு, 15 ஜோடி சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல், ரயில்வே, முக்கியமான தடங்களில், 100 ஜோடி ரயில்களை, தினசரி அட்டவணைப்படி இயக்கி வருகிறது.

கொரோனா பரவல் குறையாததால், மற்ற ரயில் சேவைகள் அனைத்தையும், ஆகஸ்ட், 12ம் தேதி வரை, ரயில்வே தடை செய்துள்ளது.ரயில்வே, நாடு முழுதும், தினமும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்களை இயக்கி வந்த நிலையில், இப்போது, 230 ரயில்களை மட்டுமே இயக்கி வருகிறது. அதாவது, 2 சதவீத ரயில்களை மட்டுமே இயக்கி வருகிறது.உத்தரவுஇந்த, 2 சதவீத ரயில்களும், குறித்த நேரத்தில் புறப்பட்டு, குறித்த நேரத்தில், அனைத்து இடங்களையும் சென்றடைய வேண்டும் என, மண்டல அதிகரிகளுக்கு கடந்த மாதம், ரயில்வே உத்தரவிட்டது.இந்நிலையில், நேற்று, அனைத்து ரயில்களையும், குறித்த நேரத்தில் இயக்கி, 100 சதவீத சாதனையை ரயில்வே படைத்துள்ளது. இதற்கு முன், கடந்த, 23ம் தேதி, ஒரு ரயிலைத் தவிர, மற்ற ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

Related posts

தமிழகத்தில் இன்று 4929 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Fit again Rohit Sharma to undergo fitness test after lockdown

Penbugs

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Penbugs

Sonia Gandhi becomes interim Congress Party President

Penbugs

Switzerland’s Matterhorn peak lights up with Indian flag in show of solidarity

Penbugs

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி

Penbugs

OMR Food Street, Thoraipakkam-The other side of the story!

Penbugs

Viral : Minister Sellur Raju addresses masks as napkins

Penbugs

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,508 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Mumbai: Man arrested for sexually assaulting a dog

Penbugs