Penbugs
Coronavirus

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாகவும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.

தமிழகத்திற்கு அதிகளவில் ரேபிட் கிட் டெஸ்ட் கருவியை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல் அமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கூடுதல் ரேபிட் கருவி வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

Kesavan Madumathy

COVID19: 639 positive cases in TN

Penbugs

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்: 5 ஆவது இடத்தில் இந்தியா !

Kesavan Madumathy

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Chennai Power shutdown on July 18 for Maintenance: List of places

Penbugs

COVID19: Statue of Unity put up for sale in OLX; case filed

Penbugs

Stuart Broad fined by Chris Broad for Yasir Shah send-off

Penbugs

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs