Coronavirus

ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவு

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16116 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு 519 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 4200 பேரும், டெல்லியில் 1893 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

மத்திய அரசு, கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட 21 நாட்களை, மே 3ம் தேதி வரை நீட்டித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்தசூழலில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் மே 7ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், அதுவரை எந்தவிதமான தளர்வுக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அங்கு வீடுகளுக்கு உணவுப்பொருட்களை டெலிவரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

Penbugs

Corona outbreak: Sachin Tendulkar donates 50 Lakhs

Penbugs

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த கிளென்மார்க் நிறுவனம் …!

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs

Lockdown fun: Couple recreate iconic movie scenes

Penbugs

இ – பாஸ் நடைமுறை குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

Penbugs

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

COVID19: Tamil Nadu reports 66 new cases

Penbugs

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு

Penbugs