Coronavirus

ஆர்டர் செய்தால் இப்போது ஆவின் பொருள்கள் வீடு தேடி வரும்…!

இந்த ஊரடங்கு காலத்தில் ஆர்டர் செய்தால் ஆவின் பால் சார்ந்த உப பொருள்கள் வீடு தேடி வரும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வர நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாளை மறுநாள் முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் ஆர்டர் செய்தால் ஆவின் பால் சார்ந்த உப பொருள்கள் வீடு தேடி வரும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘உணவு விநியோகம் செய்துவரும் சொமாட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே ஆவின் பால் விநியோகிக்க ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது. ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட உபபொருட்களையும் பொதுமக்கள் ஆர்டர் செய்து பெறலாம். தற்போது ஆவின் முகவர்களுக்கான நியமன வைப்புத்தொகை ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா மரணத்தில் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

இ‌பாஸ் தளர்வால் சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்

Penbugs

Covid19: Kamal Haasan’s open letter to PM Modi

Penbugs

COVID-19: Meet DRV, a Disaster Management Organisation working tirelessly to help people

Penbugs

தமிழகத்தில் இன்று 6031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

COVID19: Mortaza tested positive for the 2nd time in 15 days

Penbugs

DCGI approves Covaxin, Oxford-AstraZeneca vaccines for emergency use

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs