Coronavirus

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

கொரோனா ஊரடங்கு தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களுக்கு உரை

ஊரடங்கு தளர்வுகள் 2.0 என்கிற நிலைக்கு நாம் தற்போது முன்னேறி வந்துள்ளோம்

இந்திய மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது

சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன

ஊரடங்கு காரணமாக கொரோனா பரவலும் கட்டுப்படுத்தப்பட்டது

தற்போது கூடுதல் கவனத்துடன் மக்கள் இருக்க வேண்டியது அவசியம்

சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்

அரசு அதிகாரிகள், மக்கள் தற்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்

ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டியது முக்கியம்

ஊரடங்கு விதிகளை ஒரு நபர் மீறுவது கோடிக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு சமம்

ஊரடங்கு விதிகள் விவகாரத்தில் சட்டத்திற்கு மேலாக எந்த ஒரு நபரும் இல்லை

கொரோனாவால் ஏழை மக்கள் பாதிப்பு அடையவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம்

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் தற்போது நாம் எடுக்கும் நடவடிக்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது

ஊரடங்கு விதிகளை மீறி சிலர் அலட்சியமாக செயல்படுவது கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது

கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏழை மக்களுக்காக ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது

ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.31ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது

கொரோனா ஊரடங்கு சமயத்தில் சுமார் 80 கோடி மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன

அமெரிக்க மக்கள் தொகையை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு மக்கள் இந்தியாவில் பலன் அடைந்துள்ளனர்

ஊரடங்கு சமயத்தில் உணவு இல்லாமல் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை

விவசாயிகளுக்கு சுமார் 18ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன

நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும்

நவம்பர் வரை இலவச ரேசன் பொருட்கள்

பிரதமரின் கரீப் யோஜனா திட்டம் மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

சிறிய தவறுக்கு கூட இடங்கொடுக்க கூடாது

பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நிலைமை சீராகவே உள்ளது

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், இந்தியாவின் நிலைமை சீராகவே உள்ளது

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் நிலைமை சீராக உள்ளது

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படக் கூடும்

இதுபோன்ற நேரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

ஊரடங்கு தளர்வின் முதல் கட்டத்தில் தனிப்பட்ட மற்றும் சமூகப் பழக்கங்களில் அலட்சியம் அதிகரித்துள்ளது

முன்னர் இருந்ததுபோல மாஸ்க் அணிவது உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்

நாள்தோறும் பல முறை 20 விநாடிகளுக்கு கைகழுவும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்

ஏழை மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை மத்திய அரசின் நடவடிக்கைகளால் தவிர்க்கப்பட்டது

முழுஊரடங்கு காலத்தைப் போலவே, விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

உள்ளூர் நிர்வாகங்களும், மக்களும் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் விதிமுறைகள் ஒன்றுதான்

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்

விதிகளை யாரேனும் மீறுவதைப் பார்த்தால், அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படும்

Related posts

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

Penbugs

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

Penbugs

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs