இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும், குணமடைவோர் விகிதம் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போல இறப்பு விகிதமும் 2 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 60 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது.
அதில் இதுவரை 16,39,599 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது , அதாவது இது 70 சதவீதம் ஆகும்.
உலகளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா அதிகமாக பாதித்த 3ஆவது நாடு இந்தியாவாகும். அந்த இந்தியாவில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் அடுத்த இடத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.