Coronavirus

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதன் காரணமாக கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது .

தற்போது ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது இல்லத்தில் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 4301 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Ahead of Diwali, Chennai’s Ranganathan Street sees huge crowd

Penbugs

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

Josh Little handed demerit point for inappropriate language usage against Bairstow

Penbugs

Salman Khan launches personal care brand FRSH, starts with sanitizer

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது”- சென்னை மாநகராட்சி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Leave a Comment