Coronavirus

ஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 50சதவீத பணியாளர்களுடன் வரும் 13 ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது .

ஆனால் தற்போதைய ஊரடங்கு நடைமுறைப்படி பணி செய்வதில் சிரமம் இருப்பதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்ததன் பேரில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 90% பணியாளர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பொது போக்குவரத்து வசதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் முடிந்தவரை பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய ஊக்குவிக்குமாறும், பணியாளர்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு

Anjali Raga Jammy

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Kesavan Madumathy

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs

ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்

Anjali Raga Jammy

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 6501 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5548 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment