கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது, இதுவரை நான்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதற்குப்பிறகு மே 31 வரை நான்காவது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது, ஐந்தாவது ஊரடங்கு பரிசீலனையில் இருக்கும் நிலையில், இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திகும் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக எந்த நிறுவனங்களும் செயல்படவில்லை,
இந்த நிலையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் பல நிறுவனங்களை உருவாக்கலாம் இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
அதன்பேரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளார்.
உலகின் மிக முக்கிய நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் புதிய தொழில் தொடங்க முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா காரணமாக சீனாவில் இருந்து பல அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. இந்த நிறுவனங்களை இந்தியா தன் பக்கம் இழுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுபோன்ற முயற்சியில் தமிழக அரசும் தன் பங்கை அளித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!