Coronavirus

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் சோதனையை நடத்த ஐசிஎம்ஆர் தேர்ந்தெடுத்துள்ள 12 நிறுவனங்களில் ஒன்றான டெல்லி எய்ம்சில், ஐந்து பேருக்கு முதற்கட்ட சோதனை இன்று துவக்கப்படுகிறது.

டெல்லி எய்ம்சில் ஆரோக்கியமான 100 நபர்களிடம் முதற்கட்ட சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க உள்ளவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்து கொண்டிருப்பதாவும், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பத்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு அதில் கிடைக்கும் முடிவுகளை எய்ம்ஸ் மருத்துவமனையின் நெறிமுறை குழுவினர் ஆராய்ந்த பின்னர் எஞ்சியவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே தடுப்பூசி சோதனைக்கு தாமாக முன்வந்துள்ள 3500 பேருக்கு நீரிழிவு, ரத்தகொதிப்பு, சிறுநீரக நோய்கள், இருதய-கல்லீரல் பிரச்சனைகள் உள்ளனவா என சுமார் 50 வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவர்கள் சோதனைக்கு தகுதியானவர்களாக இருப்பது உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் துணையுடன் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

Related posts

COVID19: TN’s youngest patient 10-month-old baby recovers

Penbugs

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

Now you can order food through Instagram

Penbugs

Sandeep Lamichchane becomes 4th Nepal player to test positive for Covid-19

Penbugs

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs

தமிழகத்தில் இன்று 4301 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Kesavan Madumathy

TN Govt Adds 1000 more beds as Most hospitals are nearly full

Penbugs

COVID19: 70YO Man beats COVID19 in 62 days, gets $1.1 Million hospital bill

Penbugs

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

Leave a Comment