தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளது மேலும் அவருத்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் அதனை அன்பழகன் மறுத்து செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்தார் அதில் சாதரண காய்ச்சல் மட்டும்தான் எனவும் கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது திமுகவின் தலைவரும் , எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் தான் அமைச்சரை தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள்#Covid19-ல் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.” -மு.க.ஸ்டாலின்.
காலையில் இருந்து மாறி மாறி வரும் தகவல்களால் எது உண்மையான நிலவரம் என்ற குழப்பம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!