Editorial News

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மதுபானம் வாங்கிய மது பிரியர்கள்

டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாது என்பதால் நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 177 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, சேலம், கோவை ,மதுரை என்ற மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு மது விற்பனையானது நேற்று ஒரேநாளில் 177 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது.

இன்று தமிழகம் முழுவதுமாக எந்தவித தளர்வும் இன்றி கடும் கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதே மதுபானங்கள் விற்பனைக்கு காரணமாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்றே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

நேற்று ஒரு நாள் மட்டும் 177 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மது விற்பனையில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 40.75 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது நடைபெற்றுள்ளது. திருச்சி மண்டலத்தில் 40.39 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 39.40 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 35.90 கோடி ரூபாய்க்கும் , சென்னை மண்டலத்தில் 20.82 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related posts

CoronaVirus outbreak: Suriya’s message to everyone

Penbugs

Kids recovered under Operation Smile witness India Test in Chepauk

Penbugs

Beware: After Blue whale challenge, Skull Breaker challenge is going viral

Penbugs

Criticism overflows- Statue of Unity

Penbugs

Steps taken to ensure no scarcity of essential products: PM Modi

Penbugs

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்!

Penbugs

Nobody has breached our border: PM Modi

Penbugs

AR Rahman is accused by Income Tax dept of routing income to his foundation

Lakshmi Muthiah

24YO Man kills 9 people to cover murder of his lover

Penbugs

Chhattisgarh CM orders suspend rape accused IAS officer

Penbugs

Banning apps not enough, need to give befitting reply to China: WB CM Mamata Banerjee

Penbugs

PM Modi calls for all-party meeting to discuss Ladakh situation

Penbugs

Leave a Comment