Editorial News

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மதுபானம் வாங்கிய மது பிரியர்கள்

டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாது என்பதால் நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 177 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, சேலம், கோவை ,மதுரை என்ற மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு மது விற்பனையானது நேற்று ஒரேநாளில் 177 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது.

இன்று தமிழகம் முழுவதுமாக எந்தவித தளர்வும் இன்றி கடும் கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதே மதுபானங்கள் விற்பனைக்கு காரணமாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்றே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

நேற்று ஒரு நாள் மட்டும் 177 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மது விற்பனையில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 40.75 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது நடைபெற்றுள்ளது. திருச்சி மண்டலத்தில் 40.39 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 39.40 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 35.90 கோடி ரூபாய்க்கும் , சென்னை மண்டலத்தில் 20.82 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related posts

சென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணம் தள்ளுபடி

Kesavan Madumathy

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

Shiva Chelliah

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

Penbugs

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Police Station celebrates conviction of two rapists

Penbugs

Social Media unites Nanganallur locals as residents help themselves in pond cleanup!

Penbugs

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

Penbugs

He wasn’t going to let me speak anyway: Kasturi eats during debate with Arnab

Penbugs

Liberia declares rape a national emergency

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

Ayodhya Verdict Live: Muslim parties to get alternate land

Penbugs

Leave a Comment