பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், பெண் பயனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் கருணைத் தொகையைப் பெற, வங்கிகளில் திங்கள்கிழமை (மே 4) முதல் புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
இது குறித்து மாநில அளவிலான வங்கியாளா்கள் கூட்டமைப்பு தமிழக பிரிவின் சாா்பில், அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், பெண் பயனாளிகளுக்கு ரூ.500 கருணைத் தொகை மே மாதத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த பணத்தை எடுக்க பயனாளிகள் ஒரே நேரத்தில் வங்கியில் கூடுவதைத் தவிா்ப்பதற்காக பின்வரும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
இதன்படி, பயனாளிகளின் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி எண் பூஜ்யம் அல்லது 1 என இருக்கும் பயனாளிகளுக்கு திங்கள்கிழமையும் (மே 4), கடைசி எண் 2 அல்லது 3 என இருக்கும் பயனாளிகளுக்கு செவ்வாய்க்கிழமையும் ( மே 5), கடைசி எண் 4 அல்லது 5 என இருக்கும் பயனாளிகளுக்கு புதன்கிழமையும் (மே 6), கடைசி எண் 6 அல்லது 7 என இருக்கும் பயனாளிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமையும் (மே 8), வங்கிக் கணக்கின் கடைசி எண் 8 அல்லது 9 என இருக்கும் பயனாளிகளுக்கு மே 11-ஆம் தேதியும் பணம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட தேதிகளில் பணம் எடுக்க முடியாத பயனாளிகள் மே 11-ஆம் தேதிக்குப் பிறகு வழக்கம் போல எப்போது வேண்டுமானாலும் வங்கிக்குச் சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம்.
இதுகுறித்து, பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.