Coronavirus

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆகவும், குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய RT-PCR பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதத்தை 6.4% என்ற அளவிற்கு குறைத்துள்ளோம். கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே இலக்கு.

தமிழகத்தில் இதுவரை 68,15,644 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

178 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு 6 மாதங்களில் ரூ.831 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளது. இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு 7 ஆயிரத்து 321 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

COVID19: Dubai Hospital waives off Rs 1.52 crores bill of Indian man

Penbugs

Josh Little handed demerit point for inappropriate language usage against Bairstow

Penbugs

1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் – மத்திய அரசு..!

Kesavan Madumathy

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Chetan Sakariya’s father dies of COVID19

Penbugs

Amid lockdown extension, Migrant workers protest at Mumbai Bus stand

Penbugs

Yashika Aannand birthday celebration: Fans arrange blood donation campaign

Penbugs

Pakistan cricketer Taufeeq Umar recovers from COVID19

Penbugs

ENG v IRE, 3rd ODI: Tons from Stirling, Balbirnie leads Ireland in highest run chase

Penbugs

Supermachans turn 6 | Chennaiyin FC

Penbugs

IPL 2020: All 13 CSK members tested negative

Penbugs

Leave a Comment